Monday, January 11, 2010

உனக்காய் ஒரு கவிதை!!




    என் உயிர் காதலியே
    எந்தன் உயிரின்
    உயிரற்ற நிலையை
    காதலினால் மீட்டு தந்தவளே!!

    உனக்கான கவிதையின்
    முயற்சிகளில்
    மென்மையான வார்த்தைகளை
    இனிமையான நினைவுகளின் 
    அறைகளிலிருந்து எடுக்கும்போது
    நினைவுகள் ஏனோ
    வார்த்தைகளை விட்டுவிட்டு
    உன்னை சுற்றியே
    மையம் கொள்கிறதடி!!!

    எத்தனை  கவிதை
    எழுதினாலும்
    அவை  உன்னைவிட
    பரவசம் தருவதில்லை
    பெண்ணே!!
    கவிதை திரும்ப திரும்ப
    படித்தால்
    சுவை குறைந்துவிடும்..
    உன்னை ஒவ்வொரு முறை
    பார்க்கும்போதும்
    இன்னும் இன்னும்
    ரசிக்க தோன்றும்!!

    உன்னை காதலித்ததால்
    கவிதை எழுதவில்லை
    ஒரு கவிதையைத்தான்
    காதலித்துக் கொண்டிருக்கிறேன்!!

    நாம் வாழ்வில்
   இணையும் நாள்
   எதிர்பார்த்து
   என்றும் காதலுடன்
   உன் காதலன்!!!
   
   
   

1 comment:

cheena (சீனா) said...

கவிதையைக் காதலிக்கும் கவிஞன் எழுதிய கவிதை அருமை - காதல் மழை பொழிகிறது