Wednesday, November 11, 2009

உன் காதல் வருகையால்...............

பாலைவனம் தான் என் மனம் !
அதில் பூக்களாய்  மலர்ந்தது உன் காதல்!!!
திறக்காத கதவுகள் தான் என் மனம் !
அதை தென்றலாக வந்து திறந்தது உன் காதல்!!!      
இசைக்காத வீணை தான் என் மனம் !
அதில் இன்னிசை மீட்டியது உன் காதல்!!!
வெள்ளை காகிதம் தான் என் மனம் !
அதில் இனியே கவிதைகள் எழுதியது உன் காதல்!!!
இத்தனை செய்த உன் காதல் என்றும் வேண்டும் ........
தருவாயா ??????????????? என் உயிரே !!!!!!!

உன்னை பார்க்கும் முன் !!!!!!!



பூக்கள் அழகு தான் !
உன் பூன்னகை பார்க்கும் முன் !!

ஓவியம் அழகு தான் !

உன் கைரேகை பார்க்கும் முன் !!

மழை மேகம் அழகு தான் !

உன் கருவிழிகளை பார்க்கும் முன் !!

வெண்ணிலா அழகு தான் !

உன் முகத்தினை பார்க்கும் முன் !!

பூக்களின் பனி துளி அழகு தான் !

உன் கண்ணிரை பார்க்கும் முன் !!

கவிஞனின் கவிதை அழகு தான் !
உன் வார்த்தைகளை கேட்கும் முன் !!

பிறந்த குழந்தை அழகு தான் !

உன் மனதை பார்க்கும் முன் !!

மயிலின் நாட்டியம் அழகு தான் !

உன் நடை தோரணை பார்க்கும் முன் !!!

Friday, November 6, 2009

வரம் தருவாயா..........

காதல் இனிக்கும் கரும்பா? எரிக்கும் நெருப்பா?
தெரியவில்லை.....
காதல் பாற்கடல் அமிர்தமா?
பாம்பின் நஞ்சா?
ருசித்ததில்லை.....
காதல் பூங்காவின் தென்றலா?
பாலைவன புயலா?
புரியாத புதிர்...
இதையெல்லாம் அனுபவிக்க,
எனக்கு உன்  காதல்  வரம்  தருவாயா?


என்ன செய்ய.....

இயற்கை தொடுக்கும்
இடி மின்னல்
தாக்குதலை- விட
உன் இமைகளின்
நடுவே உள்ள
கருவிழியும் வெள்ளை
மேகமும் தொடுக்கும்
ஒரு நொடி பொழுது
தாக்குதலை
தாக்கு பிடிக்க முடியவில்லை
என்னால்..........

மறதி அல்ல.........?

ஓடோடி வந்து
உதவியே நண்பர்களை
 காட்டிலும் - ஒரு
நொடி வந்து சென்றது
உன் முகம் மட்டும் தான் - என் 
நினைவுக்கு வருகிறது
உனக்கு மிகவும்
பிடித்தவர்கள் யார் என்று..?
கேள்வி வந்த போது
இது என்ன வியாதி
கண்டிப்பாய் மறதி அல்ல
வேறேன்ன.........?