Sunday, January 31, 2010

உன் கையால் மாலையிடு !!!!!!!!!!!!




உறவுகள் ஏழு
ஜென்மம் தொடரும்
என்னும் உண்மை
உணர்வாயா?
நான் எடுக்கும் பிறவி
யாவிலும் எந்தன்
உறவாய்த் தொடர்ந்து
வருவயா????

அமிலம் தன்னில்
தாது கரைந்தால்
அதிலே எழுவது மின்சக்தி....
உன் அன்பில் நாளும்
கரைந்து,கரைந்து
அறிந்து கொண்டேன்
என் சக்தி!

நீயும் , நானும்
கைகள் கோர்த்து
நடந்த நாட்கள்
மறந்தாயா?
உன் நினைவில் வாடிக்
கரையும் என்னை
நிற்கதியாக
விடுவாயா?


அன்பே உந்தன்
ஆஸ்தியை அல்ல
எந்தன் இதயம்
நேசிப்பது!!
நான் அல்லும், பகலும்
இறைவனிடத்தில்
உன்னைத் தானே
யாசிப்பது!!!!

உன்னிடம் சொல்ல
ஆயிரம் கதைகள்
எனக்குள் கோடி
ஒளிந்திருக்கும்!
நீ நேரில் வந்து
நின்றால் போதும்
எல்லாம் நொடியில்
மறந்திருக்கும்!!

உனக்கும் இந்த
மறதி வரலாம்!
உடனே ஒடி
வந்துவிடு!
ஏழு ஜெமம் வாழ
கழுத்தில் கையால்
மாலையிடு!!!!!!

6 comments:

அண்ணாமலையான் said...

ரொம்ப ஏக்கமோ?

Saraj said...

ஆமாம் நண்பா :))

திவ்யாஹரி said...

//நீயும் , நானும்
கைகள் கோர்த்து
நடந்த நாட்கள்
மறந்தாயா?
உன் நினைவில் வாடிக்
கரையும் என்னை
நிற்கதியாக
விடுவாயா?//

அப்படிலாம் விட மாட்டாங்க.. நல்ல பையன் தான் ம்மா..
இப்போதே நிறைய கவிதை எழுதி விடு..
திருமணத்திற்கு பின் அவங்க (hubby) பேரை தவிர வேற ஏதும் லேசுல வராது.. இதான் இப்ப என் பிரச்சனை..

cheena (சீனா) said...

MMMM நல்ல கவிதை - ஏக்கம் தீர வாழ்த்துகள்

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு நண்பரே .
கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது .

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

அய்யோ என்னை கப்பாத்த யாருமே இல்லையா ?


மீண்டும் வருவான் பனித்துளி !