Saturday, December 5, 2009

எப்படி தோற்காமல் போக..?

உற்சாகமாய்தான் விடிகிறது

உன் உளறல் ரசித்த
ஒவ்வொரு இரவும்..!


உனக்கு பிடிக்கும் என்பதால்
கவிதையை ரசிக்கிறாய்..
எனக்கு பிடிக்கும் என்பதால்
உன்னை ரசிக்கிறேன்..!



மழலை புன்னகை பிடிக்கும்
என்று சிரிக்கிறாய்
உன் புன்னகை பார்த்தவாறு
மழலையாகி போகிறேன்..!


நீ அழகாய் சிரிக்கிறாய்
என்றதும் வெட்கபடுகிறாயே..
அழகாய் வெட்கபடுகிறாய் என்றால்
எப்படி சிரிப்பாய்..!


புன்னகைக்கிறேன் என்பதால்
என்னை பிடிக்கும் என்கிறாய்..
உனக்குபிடிக்கும் என்பதால்
புன்னகைக்கிறேன்..!



என் வாழ்வின் அகராதி முழுதும்
காதல் என்றால் நீ
நீ என்றால் காதல்..!


உன் அழகின் விளக்கம் கேட்டிருந்தாய்..
உலகின் மிகச்சிறந்த பூவும்
தோற்றுபோகும் உன் அழகில் என்று
சொன்னவுடன் சிரிக்கிறாய் வெட்கமுடன்...


அய்யோ!
நீ இப்படி சிரித்தால்
உலகமே தோற்றுவிடும் அல்லவா..
சொன்னவுடன் எப்படி சிரிக்கிறாய்..!


தோல்விகளுக்காய் வருந்தும் நான்
முதல் முறை சிரித்தேன்
உன்னிடம் தோற்றபோது...


இப்படி காதல் செய்யும் உன்னிடம்
எப்படி தோற்காமல் போக..?


உன் கண்ணீர் பிடிக்கும்
என்றதும் அதிர்கிறாயே..
அது புன்னகையால் மட்டுமே
வரும் கண்ணீர்
என்று சொல்லும் முன்..!

1 comment:

cheena (சீனா) said...

புன்னகையால் வரும் கண்ணீர் - அதிராதே - அருமையான கற்பனை - காதல் ரசம் - கொப்பளிக்கிறது